பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தமிழ்நாட்டில் 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், கொடைக்கானலில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தை தொடர்ந்து எதிர்த்த காரணத்தால் அவர் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்கு காரணமானவர்களுக்கு இவர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜனவரி 25-ம் தேதி அப்துல் மஜீத், ஷாகுல் ஹமீத் ஆகியோரை என்.ஐ.ஏ. கைது செய்த நிலையில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இதயத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.