பாய்லர் வெடித்து விபத்து: பலருக்கு காயம், சிலர் மாயம், ஐவர் மரணம்!

புதன், 1 ஜூலை 2020 (12:26 IST)
நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 
 
15 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிலாளர்கள் 5 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்