அதில், சென்னையில் பொதுமக்களுக்கு காய்கறி தேவையை முழுமையாகச் சமன் செய்ய, 1,200 ஏக்கரில் பந்தல் வகை காய்கறி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 9 லட்சம் குடும்பங்களுக்கு 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75% மானியத்துடன் வழங்கப்படும்.
பாரம்பரிய காய்கறி ரகங்கள் 2,500 ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.2.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள் மற்றும் பிற உடனடி தேவையான பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மலர் விவசாயிகளை மேம்படுத்த ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் உற்பத்தியில் முன்னோடி சாதனை படைத்த 100 உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று, முன்னேறிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும்.