சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து ஏற்கனவே செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பயன் அளிக்கின்றன.