பள்ளி சுவர் இடிந்து உயிரழந்த மாணவர்கள் உடல் ஒப்படைப்பு

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (21:29 IST)
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கு 3 லட்சம் என தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. 
 
இதையடுத்து தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று மாணவர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் தமிழக அரசின் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்