பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே.. பத்திரிகையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சீமான்

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:03 IST)
பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே என பத்திரிக்கையாளரை அநாகரீகமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் பத்திரிகையாளரை ஒருமையில் பேசினார்.
 
 உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்றும் நீ மனநல மருத்துவரை பாருங்கள் என்றும் நீ என்னுடைய பத்திரிகை சந்திப்புக்கு வராதே என்றும் அநாகரிகமாக கேட்டார் 
 
கருத்து சுதந்திரம் என்று கூறிவிட்டு ஏன் இப்படிக் கேட்கிறீர்கள் என்று அந்த பத்திரிகையாளர் கேட்டபோது மீண்டும் அவர்கள் அநாகரீகமாக பேசியதை அடுத்து அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்