முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்- எடப்பாடி பழனிசாமி டுவீட்

திங்கள், 2 ஜனவரி 2023 (16:42 IST)
சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான முக.ஸ்டாலினுக்கு எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ ‘’திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள் . இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 ALSO READ: அதிமுக ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய  முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் ‘’என்று தெரிவித்துள்ளார்,.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்