சகோதரியின் மகளுக்கு தாய்மாமன் சீர்வரிசை! மக்கள் ஆச்சர்யம்

திங்கள், 8 நவம்பர் 2021 (21:46 IST)
சகோதரியின் மகள் பூப்படைந்ததால் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ச்னுப்பி நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருபவர்கள் வேலுச்சாமி, சதீஸ் ஆகியோரின் சகோதரி பூப்படைந்ததை அடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

எனவே, தாய்மாமன் சீர்வரிசையை முறைப்படி வேலுச்சாமி மற்றும் சதீஸ் ஆகிய இருவரும் பாரம்பரிய முறைப்படிய மாட்டுவண்டிகளில் அனுப்பி வைத்தனர். இதில், 7 மாட்டு வண்டிகளில் 25 வகையான சீர் தட்டுகளுடன் கோலாகலமாக இந்நிகழ்ச்சி உறவினர்கள் புடைசூழ நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்