பெற்ற குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

புதன், 22 ஜூன் 2016 (15:24 IST)
மதுரையில், பிறந்து 11 நாளே ஆன குழந்தையை விற்க முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
 

 
மதுரை, முடக்காத்தான் என்ற பகுதியில், பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கர்ப்பிணிப் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அந்தப் பெண்ணுக்கு, கடந்த 11ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
 
இந்த நிலையில், அந்த குழந்தையை மதுரை கேகே நகரில் காப்பகம் நடத்தி வரும் சித்ராபாய் என்பவரிடம், குழந்தையை ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
 
இந்த தகவல் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி, 
குழந்தையை கடத்தி விற்க முயன்ற பாக்கியலட்சுமி, கவிதா, சித்ராபாய், அவரது தம்பி பிரபாகரன், அவரது மனைவி பத்மா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
மேலும், அந்த குழந்தையை மீட்டு சைல்டுலைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்