ஆர்கே நகர் தொகுதியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் டிடிவி தினகரன். ஆனால் கள நிலவரம் அவருக்கு எதிராகவே உள்ளது. கூடவே ஓபிஎஸ், திமுக தரப்பு பிரச்சாரங்கள் தினகரனுக்கு மேலும் குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆர்கே நகரின் 42-வது வட்டம் கோதண்டராமன் தெரு டோபிகண்ணாவில் உள்ள வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கட்டுகட்டாக பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் ஓபிஎஸ் அணிக்கு சென்றுள்ளது. விரைந்து சென்ற ஒபிஎஸ் அணியினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.