புயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம்! - உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (13:43 IST)
தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்களுக்கு உதவும் பணிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் திமுகவினருக்கு அறிக்கை விடுத்துள்ள மு.க.ஸ்டாலின் “பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்! அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை!” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்