முதல்வராக முதல்முறையாக கொடியேற்றும் மு.க.ஸ்டாலின்!

ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (09:15 IST)
இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாட்டு மக்களால் விமரிசியாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தேசியை கொடியை ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்