பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படை.. இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.. உதயநிதி காட்டம்..!

வியாழன், 14 டிசம்பர் 2023 (13:31 IST)
பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படை எனவும், இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல எனவும் அமைச்சர் உதயநிதி காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், 'இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா' என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்;
 
விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது, பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்;
 
மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்