ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

புதன், 30 நவம்பர் 2022 (18:46 IST)
ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரம் குறித்து நாளை கவர்னரை அமைச்சர் ரகுபதி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் நாளை ஆளுநரை அமைச்சர் ரகுபதி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் கவர்னரிடம் நேரில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்