ஒரு கால் செருப்புடன் நடந்து வந்து செருப்பு தைத்த மத்திய அமைச்சர்

சனி, 26 நவம்பர் 2016 (15:58 IST)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஒரு கால் செருப்புடன் ரோட்டில் நடந்து வந்து செருப்பு தைத்துச் சென்றார்



 
 
கோவையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஸ்மிருதி இராணிக்கு விமானநிலையத்தில் செருப்பு அறுந்தது. இதனையடுத்து சாலையோர செருப்பு தைக்கும் கடைக்கு ஒரு கால் செருப்புடன் நடந்து சென்று அறுந்த செருப்பை தைத்தார். செருப்பு தைத்ததற்கு கூலியாக ஸ்மிருதி கொடுத்த 100 ரூபாய்க்கு கடைக்காரரிடம் சில்லறை இல்லை. இதனையடுத்து இரட்டை தையல் போட்டு கடைக்காரர் சமாளித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்