இதனால் சென்னை மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம், மீஞ்சூர், சிக்கராயபுரம் கல்குவாரி ஆகிய பகுதிகளிலிருந்து தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இருப்பினும் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பொதுமக்கள், இரவு பகல் என்று பாராமல் கேன்களிலும், குடங்களையும், தூக்கிகொண்டு தண்ணீருக்காக அலைவதை காணமுடிகிறது.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழக முத்ல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற இருக்கிறது.