முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி !

புதன், 12 மே 2021 (16:31 IST)
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சி சார்பில் கொரொனா நிதியாக ரூ. 10 லட்சத்தை வைகோ முதல்வரிடம் வழங்கினார்.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம்  வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:  பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் தாராளமான நன்கஒ அடை அளிக்கலாம் இதுகுறித்த செலவினஙகள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று கொரொனா தடுப்பு நிதிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நிதித்துறை செயலர் கிருஷ்ணனிடம் அரியலூர் எம்.எல்.ஏ சின்னம்மா வழங்கினார்.

இதையத்து மேலும் பலர் முதல்வரின் கொரொனா நிவாரண நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்