சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், "நம்மை இணைப்பது தமிழ் மொழிதான். நான் நம்பிக்கையுடன் உயர்ந்திருப்பதற்குக் காரணமும் தமிழ் மக்கள்தான். தமிழ் மொழியை யாராலும் கீழே இறக்கிவிட முடியாது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால், இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பதை தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.