ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதன், 13 ஜூலை 2022 (18:28 IST)
ஆகஸ்ட் 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
அவ்வப்போது தமிழகத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்தவகையில் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்