சொன்னதை விட அதிகமாக திறந்தவிட்ட கர்நாடகா?! – காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

புதன், 30 ஆகஸ்ட் 2023 (09:47 IST)
தமிழகத்தின் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் நீர்வரத்து அளவு அதிகரித்துள்ளது.



தமிழக விவசாய பயன்பாடுகளுக்காக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் போராட்டங்களும் நடைபெற்றன.

இதுகுறித்து நடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்தில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று வரை கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 4,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 6,300 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இது விவசாய தேவைகளை நிறைவேற்றும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்