சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை விடுதலை செய்யவேண்டும் என ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது 
 
இந்த விசாரணையின்போது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்