தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது வரலாற்று நிகழ்வாக உள்ளது.