கமல்ஹாசனுக்கு நெருக்கமானவர் மறைவு: டுவிட்டரில் இரங்கல்!

வியாழன், 31 மார்ச் 2022 (21:40 IST)
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நெருக்கமான ஒருவர் காலமானதை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் கடந்த 32 ஆண்டுகளாக காசாளராக பணியாற்றிய முரளி என்பவர் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை..
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்