தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (22:12 IST)
உதவிப் பேராசிரியர்கள் 10 பேருக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நெல்லை சாரா டக்கர் கல்லுாரியில் 10 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இந்த பணிக்கு ஒப்புதல் மறுநாள் திரும்பப் பெறப்பட்டது. இதை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஒப்புதலை திரும்பப் பெற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து  மனுதாரர்களுக்கு ஊதியம் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் தான் சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து 2009 ஜூன் 17 முதல் 2022 ஜூன் வரை சம்பளம் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பேராசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி,  சம்பளத்தை வழங்க வேண்டும்' என உத்தரவிட நிலையில்  இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
 
இந்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு,  ஒவ்வொரு மேல்முறையீட்டு மனுவுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதில்  ரூ.25 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட உதவி போராசியருக்கும், ரூ.25 ஆயிரத்தை சென்னை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த அபராதத் தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த அதிகாரிகளிடம் இருந்து அரசு வசூல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்