கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு நிதி உள்ளது, உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு நிதி இல்லையா? உயர்நீதிமன்றம்

Mahendran

புதன், 21 ஆகஸ்ட் 2024 (14:49 IST)
சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது, ஆனால்  சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா? வெட்கமாக இல்லையா?  என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
 
மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது, சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா? வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? என கோபமான நீதிபதிகள், மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு  ரூ.50,000 அபராதம் விதித்து உத்தர்விட்டனர். மேலும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்