அமைச்சரவைக்கு தலைமை தாங்குவது என அறிவிக்கப்படாத பொறுப்பு முதல்வராகவே பன்னீர் செல்வம் இருந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
தமிழ் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனையால் அம்மா நலமடைந்து விட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.