ஜெயலலிதாவுக்கு யாரும் இல்லை, அவர் ஒரு தனி மரம் என கூறப்பட்டது. ஆனால் அவருடைய அண்ணன் மகள் தீபா சமீப காலமாக ஊடகங்களில் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அவருடைய சகோதரர் தீபக் ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது பேருக்கு பயன்படுத்தப்பட்டார்.
ஜெயலலிதாவை தான் சந்தித்துள்ளதாகவும். சில நேரங்களில் சசிகலா தன்னை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும். ஜெயலலிதாவை சந்திப்பதை தடுத்ததாகவும் இவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் இரத்த உறவான அம்ருதா தற்போது கர்நாடகாவில் உள்ளார். அங்குள்ள ஊடகங்கள் ஜெயலலிதாவின் குடும்பத்தினரை சந்தித்து பேட்டி எடுத்து வருகின்றன. ஜெயலலிதா எப்பொழுதுமே தனது குடும்பம் பற்றிய தகவலை கூறுவதற்கு விருப்பம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.