இந்த ஜென்மத்தில சசிக்கலாவை முதல்வர் சந்திக்க மாட்டார்! – ஜெயக்குமார் உறுதி!

புதன், 10 பிப்ரவரி 2021 (16:11 IST)
சசிக்கலா விடுதலையாகி வந்துள்ள நிலையில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சசிக்கலா விடுதலையாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிக்கலா வரவால் அதிமுக – அமமுக இணைய வாய்ப்புள்ளதா என்ற வகையிலும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிக்கலா – முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவை முதல்வர் இந்த ஜென்மத்தில் சந்திக்க மாட்டார்” என கூறியுள்ளார். மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்ணன் – தம்பி பிரச்சினை என கூறியது அதிமுக உட்கட்சி விவகாரங்களைதானே தவிர அமமுகவை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்