வழக்கம் போல், இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் தமிழகம் முழுக்க சுமார் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் மூலம் பல லட்சம் இஸ்லாமிய மக்கள் பயன் அடைவர்.
இதனால், இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவு அள்ளிக் கொடுத்த பரிசுக்கு நன்றி மறக்காமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.