இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் கடற்படை பயிற்சி முதன்முதலாக 2003ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக இந்த கூட்டுப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், இந்திய-ரஷ்ய கடற்படை அதிகாரிகள் இணைந்து செயல்படும் முறைகள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதில் விளையாட்டு போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளும் இடம்பெற உள்ளன. இரண்டாம் கட்டமாக, அடுத்த வாரம் வங்களா விரிகுடா கடலில் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் ஒருங்கிணைந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.