பக்ரீத் பண்டிகை ஒட்டி ஆடுகளின் வரத்து அதிகரிப்பு - கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திங்கள், 26 ஜூன் 2023 (12:19 IST)
செங்கத்தில் பக்ரீத் பண்டிகை ஒட்டி வார சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரிப்பு.  கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
 
வருகின்ற 29ஆம் தேதி இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வார சந்தையில் வழக்கத்தை விட கிராமப்புறங்களில் இருந்து இது போன்ற பண்டிகைகளுக்காகவே விவசாயிகள் ஆட்டு மந்தைகள் இன்றி  தனியாகவே வீடுகளில் வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாக்கள்  அதிக அளவு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
 
மேலும் இன்று 30 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை சுமார் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பக்ரீத் பண்டிகைக்காக குருபானி தருவதற்காக இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றன.
 
இதனால் இந்த வார ஆட்டுச் சந்தையில் அதிக அளவு ஆடு விற்பனையாவதால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்