திமுகவில் அன்பில் பொய்யாமொழிக்கு புதிய பதவி....

சனி, 1 பிப்ரவரி 2020 (16:01 IST)
அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி மு.க. தலைமையிலான திமுகவினர் , கடந்த இரு முறை தவறவிட்ட வாய்ப்பை இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனையில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், திருச்சியை மூன்று மாவட்டக் கழகங்களாக பிரித்து அதற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
இதுகுறித்து க. அன்ழகன் வெளொயிட்டுள்ள அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ன்.நேரு தலைமைக் கழகம் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 
எனவே, திருச்சி தெற்கு திருச்சி வடக்கு ஆகிய மாவட்டங்கள்,  திருச்சி வடக்கு,  மத்திய திருச்சி ,திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. 
 
இதில், திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் நெருக்கமான நட்பில் இருக்கிறனர். 
 
அதேபோல் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்ற் சட்டப் பேரவைத் தொகுகளை உள்ளடக்கிய பகுதிகு திருச்சி வடக்கு மாவடக் கழக செயலாளராக காடுவெட்டி தியாகரான் நியமிக்கப்பட்டுள்ளர். திருவரங்கம், லால்குடி ஆகிய சட்ட பேரவைத் தொகுதிகளை உள்ளட்க்கிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளரான வைரமணி நியமிக்கப்படுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்