முக்கிய அறிவிப்பு: கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:47 IST)
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்