தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா?- குஷ்பு கேள்வி

Sinoj

திங்கள், 11 மார்ச் 2024 (22:09 IST)
தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என்று பாஜக நிர்வாகி குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நட்த்தி வருகின்றனர்.
 
சமீபத்தில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், விரைவில் 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில்,இன்று  செங்குன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது.
 
இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின் நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவ:
 
தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? போதைப்பொருளுக்கு எதிரான திமுக கூட்டணிகட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை....என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்