நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் இன்று முதல் அமல்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், '' இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி''என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும்; இந்துக்களாயினும் இலங்கையைச் சார்ந்த தமிழர்களுக்கும் குடியுரிமை இல்லை என்கிறது இச்சட்டம்.