நான் மாயமாகி விட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார் - பிரபல நடிகை ’ஓபன் டாக்’

வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:57 IST)
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷமன் மித்ரா. இவர் தொரட்டி என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீசாகிறது.
இதற்கு முன்னர், ஷமன் மித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் எனது படத்தில் நடித்த கதாநாயகி சத்யகலாவை அவரது தந்தை கடத்திச் சென்று அடைத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து கதாநாயகி சத்யகலா, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது : இப்படத்தின் பப்ளிசிட்டிக்காக, நான் மாயமாவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார் அளித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்