சென்னை, தேனாம்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், பாண்டி பஜார், மைலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.