இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth Karthick

ஞாயிறு, 1 ஜூன் 2025 (17:04 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் இரவுக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்