இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

Prasanth K

வியாழன், 12 ஜூன் 2025 (08:22 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் இன்றும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

ஏற்கனவே இன்று முதல் நான்கு நாட்களுக்கு, நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலெர்ட்) காரணமாக பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணிப்புடன் இருந்து வருகின்றனர்.

 

இன்று காலைக்குள் செங்கல்பட்டு, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்