இன்னும் சிறிது நேரத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை அறிவிப்பு

திங்கள், 14 நவம்பர் 2022 (12:56 IST)
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது 
 
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்