இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வியாழன், 16 நவம்பர் 2023 (16:56 IST)
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாகவும் வடக்கு கிழக்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்கு மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவித்துள்ளது. 
 
சென்னையில் இன்று காலை முதல் மழை இல்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்