ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை : நடந்துநரை அடித்த பெண் .. பரபரப்பு சம்பவம்

வியாழன், 3 அக்டோபர் 2019 (19:18 IST)
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வி  (28) என்பவர் மன்னார்குடி அரசு விரைந்து பேருந்தில்   சென்றுள்ளார். அப்போது கும்பகோணம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்து நடத்துநர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி , சம்பவ இடத்திலேயே நடத்துநரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
இதனையடுத்து, பேருந்தை நிறுத்திய தமிழ்ச்செல்வி, பேருந்தைவிட்டு இறங்கி காவல்நிலையத்துக்குச் சென்று, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
அரசு விரைவுப் பேருந்து நடத்துனரான ராஜூ, இதேபோன்று பாலியல் பிரச்சனையில் சிக்கி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வேலைக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில் தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து, ராஜூ மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்