மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!

Senthil Velan

வெள்ளி, 31 மே 2024 (16:13 IST)
தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து  ஜூன் 6-ஆம் தேதி அரசுப் பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். 

அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை போன்று தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். 

ALSO READ: திருடர்கள் நிலத்தில் எதற்கு தியானம்.? பிரதமர் மோடிக்கு தமிழக எம்.பி. கேள்வி..!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்