சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியல் வருகை குறித்து அவர் பேசியபோது, 'போர் வரும்போது பார்த்து கொள்வோம்' என பூடகமாக பேசினார். அதற்கு தேர்தல் வரும்போது ரஜினி களத்தில் இறங்குவார் என்று பலராலும் அர்த்தம் கொள்ளப்பட்டது.
மேலும் ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எச்.ராஜா, 'ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். அதனால் தான் கார்த்தி சிதம்பரம் இப்போதே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். விரைவில் ப.சிதம்பரமும் ஓடி ஒளிவார்' என்று கூறினார்.