படிப்படியாக காவிரி உரிமையை இழந்து வருகிறோம்: ஜிவி பிரகாஷ் கூறும் புள்ளி விபரங்கள்

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:30 IST)
நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காவிரி பிரச்சனையில் நாம் நமது உரிமைகளை படிப்படியாக இழந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

1924ஆம் ஆண்டு 575.68 டி.எம்.சி, 1984ஆம் ஆண்டு 361 டி.எம்.சி, 1991ஆம் ஆண்டு 205 டி.எம்.சி, 2007ஆம் ஆண்டு 192 டி.எம்.சி, 2018ஆம் ஆண்டு 177.25 டி.எம்.சி தண்ணீர் என நீதிமன்ற தீர்ப்புகள் கூறி வருகின்றன. மேலும் இதுதான் தமிழகத்திற்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு என்று  ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் அவரது பதிவில் கூறியிருப்பதாவது:


 

காவிரி மேலாண்மை வாரியம் “கோரிக்கை” யல்ல தமிழகத்தின் “உரிமை”.... #CauveryMangementBoard #CauveryWaterManagement pic.twitter.com/3NlYZT2R4O

— G.V.Prakash Kumar (@gvprakash) April 2, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்