அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். இதனால், சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்து பேசினார். ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.