இது குறித்து அவர் மேலும் கூறிய போது, அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடங்கள் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏஐ தொடர்பாக பயிற்சி அளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.