ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு !

செவ்வாய், 12 மே 2020 (17:29 IST)
தமிழகத்தில்  கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்ம் மே மாதங்களில் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபடும் என கடந்த 5 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜூன் மாதத்திற்காக ரேசனில் இலவச  பொருட்கள் வழங்க ரூ.219 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசுஅரசு ஆணை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்