சென்னையில் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்.. தொண்டர்கள் உற்சாகம்..!

Mahendran

வெள்ளி, 22 மார்ச் 2024 (15:20 IST)
பாஜக கூட்டணியில் இடம் பெற்ற தமிழ் மாநில காங்கிரசுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பதும் அது மட்டும் இன்றி அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
 
 இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தற்போது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 
 
முதல் கட்டமாக அவர் சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தங்களுக்கு தேர்தல் ஆணையம் அளித்த சைக்கிளை ஓட்டிக்கொண்டே அவர் வாக்கு சேகரித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
சென்னையில் ஜிகே வாசன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாக்கு கேட்டதை அடுத்து தொண்டர்களும் உற்சாகமடைந்து அவருடன் சைக்கிளில் சென்று வருகின்றனர்
 
தமிழ் மாநில காங்கிரஸ் தோற்றுவிக்கும் போது ஜிகே மூப்பனார் வாங்கிய சின்னம்தான் சைக்கிள் சின்னம். அப்போது ’ரெக்க கட்டி பறக்கதய்யா அண்ணாமலை சைக்கிள்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்