பாஜக- த.மா.கா இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

Sinoj

புதன், 20 மார்ச் 2024 (15:35 IST)
பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
நேற்று கெஜ்ஜல் நாய்க்கன் பட்டியில் நடந்த  நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி பங்கேற்றார்.
 
இதில்,  அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், ஜி.கே.வாசன். ஏ.சி.சண்முகம் . தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இன்று பாஜக மற்றும் த.மா.காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
 
அதாவது, தமாகா 4 தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், பாஜக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வருவதால் தமாகா அதிருப்தி என தகவல் வெளியாகிறது.
 
எனவே இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே முடிவு எட்டப்படவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்